சிறந்த போலீஸ் நிலையமாக முதல்- அமைச்சர் விருதுக்கு தேர்வு

வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக முதல்- அமைச்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-25 11:51 GMT

வாணியம்பாடி

போலீஸ் நிலையங்களில் ஆவணங்கள் பராமரிப்பு, வழக்குகள் விரைந்து முடித்தது, மக்களிடம் நன்மதிப்பை பெற்றது, போலீஸ் நிலையங்களை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பாக செயல்படும் போலீஸ் நிலையங்களுக்கு ஆண்டுதோறும் மாநில அளவிலான முதல்-அமைச்சர் விருது அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2021 - 2022-ம் ஆண்டு மேற்கண்ட தலைப்புகளில் சிறப்பாக செயல்பட்டதாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த போலீஸ் நிலையத்திற்கு முதல்-அமைச்சர் விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த மேலும் 4 போலீஸ் நிலையங்களும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்