சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Update: 2023-10-24 08:59 GMT

சென்னை,

வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்த நிலையில், சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது. சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 1,213 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,313 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிற பகுதிகளிலிருந்து முக்கிய தொழில் நகரங்களுக்கு செல்ல 1,846 பேருந்துகளும், சென்னைக்கு திரும்ப 1,213 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்