காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-14 09:06 GMT

கூட்டத்தில் 56 மாற்றுத்திறனாளிடமிருந்து வீட்டுமனை பட்டா, வங்கிக் கடன், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

ஒரு பயனாளிக்கு கல்வி உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 9 பயனாளிகளுக்கு ஈமச்சடங்கு/இயற்கை மரணமடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு நிதி உதவி காசோலையாகவும் என மொத்தம் ரூ.3,21,750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கலந்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்