தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

சின்னசேலம் போலீஸ் நிலையம் முன்பு தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

Update: 2023-02-04 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம் பேரூராட்சி தூய்மை பணியாளர் கொளஞ்சி(வயது 57) நேற்று சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு இனிப்பு கடை முன்பு கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இனிப்பு கடையில் வேலை செய்து வரும் தொழிலாளி ஒருவர் கொளஞ்சியை அசிங்கமாக திட்டி பணியை செய்யவிடாமல் தடுத்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் சக பணியாளர்களுடன் சின்னசேலம் போலீஸ் நிலையத்தின் முன்பு திரண்டு நின்று கூச்சலிட்டனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் உஷாவிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொளஞ்சியை தாக்க முயன்ற தொழிலாளி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்