முதியவர் தற்கொலை

ஓசூர் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-30 18:45 GMT

ஓசூர்

ஓசூர் ஆவலப்பள்ளி கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி (வயது68). இவருக்கு இருதய பிரச்சினை இருந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்