தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Update: 2024-02-20 01:15 GMT

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது . வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு,  38,904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்.

Tags:    

மேலும் செய்திகள்