டாஸ்மாக் கடையில் தகராறு செய்த வாலிபர் கைது

டாஸ்மாக் கடையில் தகராறு செய்த வாலிபர் கைது

Update: 2022-08-06 15:41 GMT

வேதாரண்யம்

வேதாரண்யம் தாலுகா அவரிக்காட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு ஜெயராமன்(வயது52) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அவரிகாட்டை சேர்ந்த ராஜா(32) என்பவர் கடைக்கு வந்து மதுபாட்டில் கடனாக கேட்டுள்ளார். ஆனால் ஜெயராமன் கடன் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா கடையில் தகராறு செய்து, ஜெயராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜெயராமன் கொடுத்த புகாாின் பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்