கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Update: 2022-09-11 20:32 GMT

நாகா்கோவில், 

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீசார் நேற்று கீழ பெருவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக பெருவிளையை சேர்ந்த சுனில்குமார் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேல பெருவிளையை சேர்ந்த செல்வகுமார் (24) என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட சுனில்குமாரிடம் இருந்து 5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்