இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது

இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-15 19:00 GMT

கூடங்குளம் :

கூடங்குளத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் ஜெயகிருஷ்ணன் (வயது 23). இவர் ஒரு இளம்பெண்ணிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக பழகி ஆபாச படங்களை எடுத்துள்ளார். பின்னர் அந்த படங்களை தனது நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்ததும் இளம்பெண் மற்றும் அவரது தாயார் சென்று ஜெயகிருஷ்ணனிடம் தட்டிக் கேட்டனர். அப்போது ஜெயகிருஷ்ணன், அவரது தந்தை வெற்றிவேல் மற்றும் தாய் ஆகிய மூவரும் சேர்ந்து இளம்பெண்ணையும், அவரது தாயையும் அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூடங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜெயகிருஷ்ணன் மற்றும் தாய், தந்தை மீது சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் ஜெயகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்