விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

நெல்லை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-06 19:45 GMT

நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தை அடுத்த மல்லக்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் கோவில்பட்டியில் தங்கி இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மகன் அக்பர் அலி (வயது 19). இவர் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மல்லக்குளத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அக்பர் அலியை அவரின் பாட்டி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து அக்பர் அலி விஷம் குடித்தாராம். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்