கொடுமுடியில் கோவில் விழா:பறவை காவடியில் வந்த பக்தர்கள்

கொடுமுடியில் கோவில் விழா நடந்தது. இதில் பறவை காவடியில் பக்தர்கள் வந்தனா்.

Update: 2023-02-08 22:04 GMT

கொடுமுடி

கொடுமுடி வடக்கு தெருவில் பிரசித்திபெற்ற புது மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று பக்தர்கள் பலர் பறவை காவடியில் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதேபோல் காவிரிக்கரையில் புனிதநீராடி, சிறப்பு பூஜை நடத்தி பலர் அக்னி சட்டி ஏந்தியும் மாவிளக்கு எடுத்தும் வந்தார்கள்.

இன்று (வியாழக்கிழமை) கோவிலில் கம்பம் பிடுங்கப்படுகிறது. நாளை அம்மன் முத்து பல்லக்கு ஊர்வலம், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்