வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது

புவனகிரி அருகே வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-24 18:45 GMT

புவனகிரி.

புவனகிரி அருகே தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 42) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது அக்காள் சாந்தி என்பவருக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை ஏறபட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சரவணன் தனது அக்காள் சாந்தி வீட்டுக்கு சென்றார். அப்போது சொத்து பிரச்சினை தொடர்பாக அவருக்கும் சாந்தியின் மகன் மகேந்திரன் (21) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் கத்தியால் மகேந்திரனை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புவனகிரி தாலுகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்