தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது

தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-03 19:01 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் மேலகாலனியை சேர்ந்தவர் சுப்பையா மகன் இசக்கிமுத்து என்ற மூக்காண்டி. கூலி தொழிலாளி. நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி சென்று விட்டு களக்காட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையை சேர்ந்த செல்லப்பா மகன் ராஜா (35) என்பவர் அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். மூக்காண்டி கொடுக்க மறுத்ததால், ராஜா கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் மூக்காண்டி தனது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.90-ஐ எடுத்து கொடுத்தார். மேலும் ராஜா அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றார். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜாவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்