கோவில் கட்டுமான பணியின் போது தவறி விழுந்து கொத்தனார் பலி

கோவில் கட்டுமான பணியின் போது தவறி விழுந்து கொத்தனார் பலியானார்.

Update: 2023-01-25 19:00 GMT

கடலூர் மாவட்டம், ஆயிங்குடி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 57).கொத்தனார். இவர், அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் தங்கி குடுமிநாதர் கோவிலில் ஓடு பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வழக்கம்போல் பணியில் இருந்த அவர் சாரத்தில் நின்று சிமெண்டு ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்