கிணற்றில் தவறி விழுந்து மெக்கானிக் சாவு

Update: 2023-03-04 19:30 GMT

சேலம் அருகே மின் மோட்டாைர சரி செய்தபோது கிணற்றில் தவறி விழுந்து மெக்கானிக் இறந்தார்.

மெக்கானிக்

சேலம் அருகே உள்ள அதிகாரிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 55). மெக்கானிக். இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியம் நேற்று காலை வரகம்பாடியில் உள்ள உறவினரான தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கிணற்றில் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் தலை மோதியதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியம் தண்ணீரில் முழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் மற்றும் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

விசாரணை

பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பாலசுப்பிரமணியத்தின் உடலை தேடினர். சுமார் 1½ மணி நேரத்துக்கு பின்னர் அவரது உடலை வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்