வடமாநில ரெயில்வே ஊழியரை மிரட்டி செல்போன் திருட்டு

வடமாநில ரெயில்வே ஊழியரை மிரட்டி செல்போன் திருட்டுபோனது.

Update: 2022-11-24 21:11 GMT

பொன்மலை பொன்னேரிபுரம் அருகே திருநகர் பகுதியில் வசித்து வருபவர் ஜஸ்வந்த் தாஸ்(வயது 28). வடமாநிலத்தை சேர்ந்தவரான இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த வாரம் வேலைக்கு செல்வதற்காக பொன்மலை சூசையப்பர் ஆலயம் அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பேண்ட் பையில் வைத்திருந்த செல்போன் கீழே விழுந்துள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 சிறுவர்கள், அவரை மிரட்டி அந்த செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து ஜஸ்வந்த் தாஸ் பொன்மலை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜஸ்வந்த் தாசின் செல்போனை திருடிச்சென்ற பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த 16, 15 மற்றும் 14 வயதுடைய 3 சிறுவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த சிறுவர்களிடம் இருந்து செல்போனை வாங்கியதாக பொன்மலை அடைக்கல அன்னை நகரை சேர்ந்த சக்திவேல் முருகன்(வயது 32) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்