தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

தொழிலாளி வீட்டில் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-01 18:49 GMT

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 38). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனதுவீட்டை பூட்டிவிட்டு மனைவி அர்ச்சனா மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் வெளியில் தூங்கிக் கொண்டிருந்தார். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3½ பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்