மரக்கன்றுகள் நடும் பணி

வெள்ளிமலையில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-04 17:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலை வெள்ளிமலை ஊராட்சிக்கு உட்பட்ட தாழ்கெண்டிக்கல் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்ட அலுவலர் மணி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் செல்வகுமரன், உதவி செயற்பொறியாளர் புஷ்பராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் அருண்ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்துகொண்டு 1400 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்