"அரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்" - தமிழக அரசு அறிவிப்பு

ஆர்வமும், விருப்பமும் உடைய நிகழ்ச்சி தொகுப்பளார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-06-28 20:03 GMT

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களை தொகுத்து வழங்க ஆர்வமுடையவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் தொகுத்து வழங்க ஆர்வமும், விருப்பமுடைய நிகழ்ச்சி தொகுப்பளார்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

தங்கள் துறையில் பணியாற்றி வரும் தூயத் தமிழில்/ஆங்கிலத்தில் பேசக்கூடியவராகவும், நல்ல குரல் வளத்துடன் கூடிய ஆர்வமுடையோர் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 என்ற முகவரியில் ஜுலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேற்கண்ட தகவலை அனைத்து பணியாளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தங்கள் அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் பார்வைக்காக வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்