புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-10-17 23:22 IST

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஜூப்ளி ரோடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற இப்ராஹிம்(வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்