மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Update: 2022-08-02 19:21 GMT

பெரம்பலூர் மன வளக்கலை மன்றம் சார்பில் 8 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தவும், பன்முக படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளும் வகையிலும் வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த மனவளக்கலையின் வாழ்க்கை கல்வியை பண்பாட்டுக் கல்வியாக வழங்கும் மாணவர் திறனூக்க பயிற்சி தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை இப்பயிற்சி பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள அறிவு திருக்கோவிலில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்களுக்கு எளிய முறை உடற்பயிற்சி, மனம் குவிப்பு பயிற்சி, தியான பயிற்சி, பண்பாட்டு சீரமைப்பு பயிற்சி ஆகியவை அளிக்கப்படும். இந்த பயிற்சி மார்ச் மாதம் வரை அளிக்கப்படுகிறது. இதில் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்