விழுப்புரம் மாவட்டத்தில்8 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 41 போலீசார் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 8 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 41 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-03-28 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் காணை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறைக்கும், வளவனூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 3-க்கும், பிரம்மதேசம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூங்காவனம் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 4-க்கும், அனந்தபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கும், செஞ்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி சத்தியமங்கலத்திற்கும், வானூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் வளவனூருக்கும், திண்டிவனம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா அனந்தபுரத்திற்கும், கோட்டக்குப்பம் மகளிர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கேத்தரின் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கும் இவர்கள் உள்பட 41 போலீசார் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்