கோவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்ற அதிசயம்

இரட்டையர்கள் நிரஞ்சன் மற்றும் நிவேதா இருவரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 530 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

Update: 2023-05-11 16:43 GMT

கோவை,

கோவை மாவட்டம் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூவைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மனைவி ஜெயசுதா. இந்த தம்பதிக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தனர்.

இந்த நிலையில் அண்மையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய 2 பேரும் 600-க்கு 530 மதிப்பெண்கள் என ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். சிறுவயதில் இருந்தே பல விஷயங்களில் ஒற்றுமையாக இருந்தாலும், படிப்பு விஷயத்தில் போட்டி போட்டு படிக்கும் இரட்டையர்கள் நிரஞ்சன் மற்றும் நிவேதா பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவித்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்