ராஜபாளையம்,
ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பழனி முருகன் என்பவருக்கு தகவல் வந்தது. இதுகுறித்து அவர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.