2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தொண்டி பேரூராட்சியில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-08-02 15:30 GMT

தொண்டி, 

தொண்டி பேரூராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வினியோகம் செய்யப்படும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதை யடுத்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக் கிழமை) ஆகிய 2 நாட்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தலைவர் மற்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்