சாராயம் விற்ற பெண் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-26 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கிடங்குடையாம்பட்டு கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அஞ்சலை (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 12 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்