கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.;

Update:2023-07-30 01:36 IST

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலிமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோவில்பத்து தேரழந்தூரை சேர்ந்தவர் அழகர் மகன் செல்வ நாயகம் (வயது24). கூலி தொழிலாளி. இவர் கடந்த 27-ந் தேதி தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் காளி வட்ட தெரு அருகில் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் ்அவரை மீட்டு தஞ்சையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்