மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2023-05-27 18:45 GMT

தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆனந்தநகரை சேர்ந்தவர் லிங்கராஜ் என்பவருடைய மகன் மணிகண்டன் (வயது 21), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது, எதிர்பாராத விதமாக சாலை பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கி நிலைதடுமாறியது. இதனால் அருகில் இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்