இளம்பெண் விஷம் குடித்து சாவு

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-14 19:28 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தெற்கு காரசேரியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவருடைய மகள் பார்வதி (வயது 21). இவர் பெற்றோருடன் கேரள மாநிலம் மூவாற்றுபுலா பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பார்வதி உடல்நலக்குறைவு காரணமாக சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். உடனே அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மூவாற்றுபுழா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்