இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

பாவூர்சத்திரம் அருகே முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-22 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துமாலைபுரம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் அஜித்குமார் (வயது 25). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அஜித்குமார் தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி 17 வயதான இளம்பெண் ஒருவரை 2-வது திருமணம் செய்து தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு வந்ததும் அஜித்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சுதந்திரா தேவி மற்றும் போலீசார், அஜித்குமாரை பிடித்து கைது செய்தனர். முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்