காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து- 60 பேர் பலி, பலர் மாயம்
காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 60 பயணிகள் பலியாகியுள்ளனர்.
புடம்பே,
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் மை- டோம்பே மாகாணத்தில், சுமார் 700 பயணிகளுடன் ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்தவர்களில் 60- பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
300 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான ஏனைய பயணிகளை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.