பிரேசிலில் மேலும் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக பிரேசில் உள்ளது.
பிரேசிலியா,
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் இருக்கும் நாடு பிரேசில். அங்கு கொரோனா பாதிப்பு 1½ கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அந்நாட்டில் கடந்த மணி நேரத்தில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,791,43ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரே நாளில் மேலும் 1054 பேர் உயிரிழ்ந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 408,829- ஆக உயர்ந்துள்ளது.