குரு என்பவர் யார்?

உண்மையில் பரம்பொருளான ஈஸ்வரனே, தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தின் கீழ் மவுனமாக அமர்ந்து நம் மனதின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார்.

Update: 2017-11-24 01:15 GMT
ண்மையில் பரம்பொருளான ஈஸ்வரனே, தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தின் கீழ் மவுனமாக அமர்ந்து நம் மனதின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார். சிவபெருமானே ‘விளக்கங்களால் பெறுவதல்ல ஞானம், அனுபவத்தால் உணர்ந்து அமைதி கொள்வது’ என்று, கையில் சின் முத்திரையுடன் காட்சி தருகிறார். பரமாத்துமாவை அடையும் வழியைச் சொல்லும் இந்த முத்திரை, நம் மயக்கங்களைப் போக்கி நல்வழியை அருளக்கூடியது. இந்த குருவே அனைத்து கலைகளுக்கும், செயல்களுக்கும் மூலமாக விளங்குகிறார். நவக்கிரகங்களில் உள்ள குருவும், தேவர்களின் ஆசானாக விளங்கும் பிரகஸ்பதி எனும் குருவும் தனித் தனியானவர்கள். இவர் களும் பரம்பொருளின் பிரதிநிதியான குருவான தட்சிணாமூர்த்தியினுள் அடங்குவர்.

சனி கதிர் பாயும் திருநள்ளாறு

பூமியில் எத்தனையோ இடங்களில் சனீஸ்வரனுக்கு ஆலயங்கள் இருக்க, திருநள்ளாறு மட்டும் விசே‌ஷமாக திகழ்வதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். பூமத்திய ரேகையில் சூரியனுடைய கதிர்வீச்சு எப்படி அதிகமாகவும், அருகிலும் இருக்கிறதோ, அதே போன்று சனி கிரகத்தின் நீள் வட்டப் பாதையின் உச்சமான கதிர்வீச்சு, திருநள்ளாறில் அதிகமாக இருக்கிறது. இதனை நமது முன்னோர் அறிந்து சனீஸ்வரனுக்கு இங்கே ஆலயத்தை அமைத்து வழிபட்டனர். சனி கிரகமானது திருநள்ளாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனது கதிர்களை வாரி இறைக் கிறது. இந்தக் கதிர்வீச்சு நம் உடலில் பட்டால், பல நன்மைகளை நாம் பெறுவோம். இக்கோவிலுக்கு வருபவர்கள் ஆற்றில் தலை முழுகி, ஒருநாள் தங்கியிருந்து ஈஸ்வரனை வழிபட்டால், சனி கிரகத்தின் கதிர்வீச்சின் பலனை முழுமையாக அடையலாம்.

மேலும் செய்திகள்