பிரம்ம ராட்சசன் சன்னிதி

திருக்காட்கரையப்பன் கோவிலில் பிரம்மராட்சசன் சன்னிதி அமைந்துள்ளது.

Update: 2021-08-17 10:05 GMT
திருக்காட்கரையப்பனுக்கு நேந்திரம் வாழையை படைப்பது வழக்கம். ஒரு விவசாயியின் நிலத்தில் விளைந்த நேந்திரம் வாழை, தங்கமாக இருந்தது. அந்த வாழையை கோவிலுக்கு அவர் காணிக்கையாக செலுத்தினார். ஒரு முறை ஆலயத்தில் இருந்த அந்த தங்க வாழை காணாமல் போனது. அந்தச் செய்தி, நாட்டு மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னன் சில காவலர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். அவர்கள் கோவிலுக்கு வந்தபோது, அங்கே ஒரு யோகி தியானத்தில் இருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து மன்னன் முன்பாக நிறுத்தினர். மன்னனும் யோகியை, சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.

இதற்கிடையில் தங்க வாழை கிடைத்துவிட்டது. உடனடியாக யோகியை விடுதலை செய்ய மன்னன் உத்தரவிட்டான். இருப்பினும் செய்யாத தவறுக்காக தண்டனை பெற்ற யோகி, தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர் பிரம்மராட்சசனாக மாறினார். பின்னர் மன்னனுக்கும், மற்றவர்களுக்கும் துன்பம் அளித்தார். மன்னன் தன் தவறுக்கு வருந்தி திருக்காட்கரையப்பனை சரணடைந்தான். பின்னர் கோவில் வளாகத்திலேயே யோகிக்கு ஒரு சன்னிதியை எழுப்பினான். பிரம்மராட்சசனாக இருந்த யோகிக்கு, அங்கு தினமும் வழிபாடு நடத்தி அவரது கோபத்தைத் தணித்தான். இந்த சன்னிதியை திருக்காட்கரையப்பன் கோவிலில் இன்றும் பார்க்கலாம். இதனை ‘பிரம்மராட்சசன் சன்னிதி’, ‘யோகி சன்னிதி’ என்றும் அழைக்கிறார்கள்.

மேலும் செய்திகள்