களக்காடு:
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்மன் கோவிலில் கணு திருநாள் விழா நடந்தது. இதையொட்டி சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் வாகன உலாவாக பிள்ளை மடத்திற்கு எழுந்தருளினர்.
அங்கு சுவாமி அம்பாளுக்கு விசேஷ அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.