வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஜிம்பாப்வே அணிக்கு 443 ரன்கள் இலக்கு

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு 443 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Update: 2018-11-14 21:45 GMT
டாக்கா,

ஜிம்பாப்வே - வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 522 ரன்களும், ஜிம்பாப்வே 304 ரன்களும் எடுத்தன. இந்த நிலையில் 218 ரன்கள் முன்னிலையுடன் 4-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. தனது 2-வது சதத்தை எட்டிய கேப்டன் மக்முதுல்லா 101 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 443 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

மேலும் செய்திகள்