ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர அணி தடுமாற்றம்

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் தமிழ்நாடு–ஆந்திரா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ஓங்கோலில் நேற்று தொடங்கியது.

Update: 2018-11-20 21:15 GMT

ஓங்கோல், 

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் தமிழ்நாடு–ஆந்திரா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ஓங்கோலில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆந்திர அணி, தமிழக வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாற்றம் கண்டு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தன. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 79 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிரிநாத் ரெட்டி ஆட்டம் இழக்காமல் 69 ரன்னும், சாய் கிருஷ்ணா 58 ரன்னும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் முகமது 4 விக்கெட்டும், நடராஜன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இன்று 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்