மாநில பள்ளி 20 ஓவர் கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன்

பள்ளிகளுக்கு இடையிலான மாநில 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நடந்தது.

Update: 2019-01-26 21:00 GMT

நெல்லை, 

பள்ளிகளுக்கு இடையிலான மாநில 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நடந்தது. இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் (சென்னை)– ஜெயேந்திர சரசுவதி (கோவை) அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த செயின்ட் பீட்ஸ் 136 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய ஜெயேந்திர சரசுவதி அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

மேலும் செய்திகள்