ஐ.பி.எல். போட்டியில் டோனி 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் - கம்பீர் கருத்து

ஐ.பி.எல். போட்டியில் டோனி 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-31 23:00 GMT
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகி இருப்பதால் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான டோனி 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விளையாடாமல் இருந்து வரும் டோனி 3-வது வரிசையில் இறங்கினால் அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பை பெறுவதுடன் அணியின் பேட்டிங்குக்கும் வலுசேர்க்க முடியும். இந்த நல்ல வாய்ப்பை டோனி சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்