விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர்: தேவ்தத் படிக்கல் அடுத்தடுத்து 4 சதம் விளாசி அசத்தல்

அபார பார்மில் உள்ள தேவ்தத் படிக்கல், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார்.

Update: 2021-03-08 09:32 GMT
டெல்லி,

விஜய்ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் டெல்லியும் கர்நாடக அணிகளும் மோதின.  இப்போட்டியில் முதலில் பேட் செய்த கர்நாடக அணியில்  துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார். 102 ரன்கள் குவித்து படிக்கல் ஆட்டமிழந்தார். 

தேவ்தத் படிக்கல் தொடர்ந்து 4 சதங்கள் விளாசி வியக்க வைத்துள்ளார். ஏற்கனவே, ஒடிசா (152 ரன்கள்), கேரளா (126*) ரயில்வேஸ் (145*) அணிகளுக்கு எதிராக சதம் விளாசியிருந்தார்.  

விஜய் ஹசாரே டிராபியில்  6 போட்டிகள் விளையாடியுள்ள தேவ்தத் படிக்கல் 673 ரன்கள் எடுத்துள்ளார். அபார பார்மில் உள்ள தேவ்தத் படிக்கல், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். பெங்களூரு அணி முதல் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 

மேலும் செய்திகள்