தாமதமாக பந்து வீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்கள் குறைவாக வீசியதால் போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.