பேட் கம்மின்ஸ் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் - நடராஜன்

ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Update: 2024-04-21 04:55 GMT

Image Courtesy: AFP 

டெல்லி,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 65 ரன்கள் அடித்தார்.

ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஐதராபாத் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ஐதராபாத் வீரர் நடராஜன் கம்மின்ஸின் கேப்டன்ஷிப் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பேட் கம்மின்ஸ் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார்.

ஒரு பந்துவீச்சாளரால் மற்றொரு பந்துவீச்சாளரை நன்றாக புரிந்து கொள்ள முடியும். எனது திட்டத்தை செயல்படுத்த உதவியாக உள்ளார். இறுதி கட்டத்தில் பந்துவீச நன்கு உதவி செய்கிறார். புவனேஷ்வர் குமாரும் எனக்கு ரொம்ப உதவி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Full View


Full View

Tags:    

மேலும் செய்திகள்