ஐ.பி.எல் : கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார்

Update: 2024-04-26 13:41 GMT

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

கொல்கத்தா:

பிலிப் சால்ட், சுனில் நரைன், ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன் ), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், துஷ்மந்த சமீரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

பஞ்சாப் :

ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன்(கேப்டன் ), ரிலீ ரோசோவ், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

Tags:    

மேலும் செய்திகள்