"சின்ன தல ரெய்னாவுக்கு நன்றி" சிஎஸ்கே நெகிழ்ச்சி டுவீட்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Update: 2022-09-06 18:21 GMT

சென்னை,

சின்ன தல ரெய்னாவுக்கு நன்றி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெகிழ்ந்துள்ளது. அனைத்து விதமான போட்டிகளில் இருந்து விடைபெற்ற ரெய்னா, உறுதுணையாக இருந்த சென்னை அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இதற்கு மிஸ்டர் ஐபிஎல்-க்கு நன்றி என பாராட்டி நெகிழ்ந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், வரலாற்றில் பல சாதனைகள் நிகழ்ந்த போது உடன் இருந்தவர் ரெய்னா எனவும், அந்த சாதனைகளை நிகழ்த்தியவரும் இவர் தான் எனவும் புகழ்ந்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்