நீண்ட கால நட்பை வெளிப்படுத்திய தவான் - ரோகித்... கட்டியணைத்து நடனமாடும் வீடியோ வைரல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின.

Update: 2024-04-19 05:14 GMT

சண்டிகர்,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஜோடிகளில் ஷிகர் தவான் - ரோகித் சர்மா இணையும் ஒன்று. இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளனர். 2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தனர்.

அதிலிருந்து 2019 உலகக்கோப்பை வரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடியாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்தனர். மேலும் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோருக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (5148) பார்ட்னர்ஷிப் அமைத்த 2-வது இந்திய ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்துள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டிக்கு முன்னதாக ரோகித் சர்மாவும் தவானும் சந்தித்து கொண்டனர். சந்தித்து கொண்ட இருவரும் கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி கொண்டனர். மேலும் பார்த்த சந்தோசத்தில் இருவரும் இணைந்து நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்