'இதுவும் கடந்து போகும்' - விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு..!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

Update: 2022-07-15 05:15 GMT

Image Courtesy : Twitter 

டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு பல வெற்றிகளை குவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முன்னாள் சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை. அவர் சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் அவரை பல முன்னாள் வீரரகள் விமர்சித்து வருகிறார்கள். மேலும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவர் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுக்க பரிந்துரைத்துள்ளனர். பார்மின்றி தவிக்கும் விராட்கோலியை 20 ஓவர் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;இதுவும் கடந்து போகும். வலிமையோடு இருங்கள் விராட் கோலி .என பதிவிட்டுள்ளார் .இதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். 


Tags:    

மேலும் செய்திகள்