இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் செலஸ்டின் மரணம்

தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பரான செலஸ்டின் (வயது 73) சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

Update: 2019-07-09 21:15 GMT

சென்னை,

தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பரான செலஸ்டின் (வயது 73) சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் மரணம் அடைந்தார். ரிசர்வ் வங்கி முன்னாள் ஊழியரான செலஸ்டின் தமிழக கால்பந்து அணிக்காக பல ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். அவர் இந்திய கால்பந்து அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்