புரோ ஆக்கி லீக் போட்டி: செப்டம்பர் 22-ந் தேதி மீண்டும் தொடங்கும்

புரோ ஆக்கி லீக் போட்டி செப்டம்பர் 22-ந் தேதி மீண்டும் தொடங்கும் என்று சர்வதேச ஆக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-09 21:45 GMT
புதுடெல்லி,

இந்த ஆண்டுக்கான புரோ ஆக்கி லீக் போட்டி கடந்த மார்ச் 7-ந் தேதிக்கு பிறகு நடைபெறவில்லை. இந்த தொடர் வருகிற செப்டம்பர் 22-ந் தேதி மீண்டும் தொடங்கும் என்று சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது. தொடக்க லீக் ஆட்டத்தில் ஜெர்மனி-பெல்ஜியம் அணிகள் மோத இருக்கின்றன. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை அடுத்த ஆண்டு ஏப்ரல் 10 மற்றும் 11-ந் தேதிகளில் சந்திக்கிறது.

மேலும் செய்திகள்