மாணவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் 1-ந்தேதி தொடக்கம்

மாணவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள், மான்ட்போர்ட் பள்ளியில் 1-ந்தேதி நடக்கிறது.

Update: 2018-11-27 22:30 GMT
சென்னை,

சென்னை பரங்கிமலையில் உள்ள மான்ட்போர்ட் மெட்ரிகுலேசன் பள்ளியில், 9-வது ‘ஒருங்கிணைந்த விளையாட்டு’ என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் வருகிற 1-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்படுகிறது. இதில் 200 மாணவ, மாணவிகளுடன், 200 மாற்றுத் திறனாளி மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களும் இணைந்து ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் வழங்கப்படும். மாலையில் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்