புரோ கபடி தொடரில் பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி
12-வது வெற்றியை ருசித்த பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
புரோ கபடி தொடரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ் 44-28 புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 39-30 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சையும் தோற்கடித்தது. 12-வது வெற்றியை ருசித்த பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.